வீட்டுக்குள் புகுந்த பாரிய பாம்பினால் பதற்றம்…!!
ஹிக்கடுவ பகுதியிலுள்ள வீடொன்றில் பாரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியுள்ளது.
திரானாகம பகுதியிலுள்ள வீட்டிலிருந்த நாய்களை சாப்பிடுவதற்கான இந்த பாம்பு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் இரவு நாய் குறைக்கும் சத்தம் கேட்டு, வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்று பார்க்கும் போது பாரிய அளவிலான மலைப் பாம்பை கண்டுள்ளார்.
பின்னர் அவர் பிரதேச மக்களுடன் இணைந்து குறித்த பாம்பினை பிடித்துள்ளார்.
இது தொடர்பில் ஹிக்கடுவ வனவிலங்கு அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகளை பாம்பினை பிடித்து, காலி கொட்டாவ காட்டில் விடுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating