பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீ பரவல்…!!
மஹியங்கனை கண்டி வீதியில் 18 வளைவுகள் உள்ள பிரசித்தமான இடத்திற்கு அண்மையில் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் தீபரவியுள்ளதாக ஹசலக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி காட்டுத்தீ 18 வளைவுகளைக் கொண்ட இடத்தில் உள்ள 17 வது வளைவிற்கு சமீபமாக இடம்பெற்றுள்ளதாக ஹஸலக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
குருலுபொத்த என்ற இடத்திலிருந்து பிட்டதுன்ன என்ற இடத்தை நோக்கிச் செல்லும் பாதையில் தீபரவியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.
முப்படைகளில் உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating