மோதலால் ஏற்பட்ட விபரீதம்! கத்திக்குத்துக்கு ஒருவர் ஸ்தலத்தில் பலி…!!
Read Time:1 Minute, 16 Second
குருநாகல் – ஏத்கந்த விகாரையில் இன்று இடம்பெற்ற தியான சபை கூட்டத்தின் போதுகத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
நிலப் பிரச்சினையின் காரணமாகவே உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இந்தமோதல் இடம் பெற்றுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கூட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த மோதல் சம்பவம்நடந்துள்ளது.இரு தரப்பினருக்கும் மோதல் அதிகரித்த நிலையிலேயே கூரிய ஆயுதம் கொண்டு குறித்தநபர் தாக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் Willorawatta பகுதியை சேர்நத நபரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர் குருநாகல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துவருகின்றனர்.
Average Rating