வவுனியாவில் பதற்றம்: பொலிஸார் குவிப்பு…!!
வவுனியா நெளுக்குளம் பாடசாலை வாயிலில் பழைய மாணவர்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
வவுனியாவில் நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இன்று (04.10.2016) காலை 8.30 மணியளவில் ஒன்றுகூடிய பழைய மாணவர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த ஆர்ப்பாட்டமொன்று பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையின் மைதானத்திற்குள் அதிபர் விடுதி கட்டப்படுவதனால் மைதானத்தில் விளையாடுவதற்கு மாணவர்களுக்கு இடவசதி இல்லாமல் போய்விடும் என்பதனால் இன்று நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட இருந்ததாக பழைய மாணவர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
எனினும் சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸாரினால் இவ் ஆர்ப்பாட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு தற்போது பழைய மாணவர்கள, ஆசிரியர்கள், அதிபர் ஆகியோரை அழைத்து கலந்துரையாடல் ஒன்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இடத்தில் அதிபர் விடுதி கட்டப்படுமாயின் தாம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராக உள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating