யாழில் இனம்தெரியாதோரால் துப்பாக்கி சூடு சம்பவம்..!!

Read Time:2 Minute, 57 Second

shot-8945rகொக்குவில் பிரம்படிப் பகுதியில் உள்ள வீட்டின் மீது நேற்று அதிகாலை 3 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த இனம்தெரியாதோரால் துப்பாக்கி சூடு மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால் உயிரிழப்புக்கள் எவையும் ஏற்படவில்லை. இருப்பினும் பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூட்டைப் பொலிஸாரே மேற்கொண்டிருக்க வேண்டும் என்று பலமான சந்தேகம் உள்ளதென அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்

வீட்டிலுள்ள இளைஞன் ஒருவருக்கு எதிராக வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது.

நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 5.45 மணிக்கு பொலிஸ் உடையில் சிலர் வீட்டுக்கு வந்தனர். வீட்டுக்கதவைத் திறக்குமாறு கோரினர்.

அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் 14 வயது சிறுமியும் அவரது இளைய சகோதரர்களுமே இருந்தனர். பொலிஸ் உடையில் வந்தவர்கள் வீட்டுக் கதவைத் திறக்குமாறு வற்புறுத்தவே வீட்டுக் கதவை சிறுமி திறந்துள்ளார். பொலிஸ் உடையில் வந்தவர்கள் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடியுள்ளனர்.

வீட்டின் அலுமாரியில் இருந்த அல்பத்தில் ஒரு படத்தை எடுத்தனர். அதன்பின்னர் அல்பத்தைத் துாக்கி எறிந்தனர். வீட்டில் இருந்து வெளியேறும் போது பொலிஸ் உடையில் வந்தவர்கள் நாளை அண்ணா சுடப்பட்டு பிணமாக இருப்பார் என்று சொல்லிக்கொண்டு கைத்துப்பாக்கியைக் காண்பித்து மிரட்டிச் சென்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்று முடிந்த பின்னணியிலேயே நேற்று அதிகாலை 3 மணிக்கு முச்சக்ககர வண்டியில் வந்த சிலர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனைப் பொலிஸாரே மேற்கொ ண்டிருக்க வேண்டும் என்று பலமாகச் சந்தேகிக்கின்றோம்- என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெங்காயத்தை கழுத்தில் வைப்பதால் இவ்வளவு நன்மைகள் ஏற்படுமா?
Next post தமிழகத்தில் பயங்கரம்… கொடூரமாக கொல்லப்பட்ட சிறுவன் கழிவுநீர் தொட்டியில் இருந்து மீட்பு!