திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விபத்தில் காயம்…!!
ஐக்கிய தேசிய கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஹாருப் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இன்று அதிகாலை 2.30 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளை, பெல்லேஹேர பிரதேசத்தில் குறித்த உறுப்பினரின் மோட்டார் வாகனம் லோரி ஒன்றின் பின் பக்கத்தில் மோதியமையினாலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவரது மகன் மற்றும் மகளும் அந்த வாகனத்தில் இருந்ததாகவும், விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி
திருகோணமலை சேருவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் இடம் பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார் .
தங்க நகர் கிராமத்தில் வசிக்கும் வாழை சேனையை சேந்த நளினி காந் என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளதாக சேருவில் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருவில் பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது .
Average Rating