நல்லிணக்கம் குறித்த மக்கள் கருத்துக்களடங்கிய இறுதி அறிக்கை 15இல் பிரதமரிடம் கையளிப்பு…!!
Read Time:1 Minute, 22 Second
இதுகுறித்து நல்லிணக்க செயலணியின் அங்கத்தவரான காமினி வியன்கொட தெரிவிக்கையில்,
நல்லிணக்கம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை பெறுவதற்காக பல்வேறு அமர்வுகள் பிரதேச மட்டத்திலான செயலணிகள் உருவாக்கப்பட்டு மக்களின் கருத்துகள் திரட்டப்பட்டிருந்தன.
அதன் பிரகாராம் பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட கருத்துக்களை உள்ளடக்கிய இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
நல்லிணக்கத்திற்கான யோசனைகள் அடங்கிய அறிக்கையில் நெறிப்படுத்தல் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதனையடுத்து குறித்த இறுதி அறிக்கையை எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கவுள்ளோம் என்றார்.
Average Rating