7 இலட்சம் பெறுமதியான ஆபரணங்களுடன் சிக்கிய கும்பல்…!!

Read Time:1 Minute, 28 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1புத்தர் சிலைகள் உட்பட 7 இலட்சம் பெறுமதியான ஆபரணங்கள் மற்றும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஐவர் அடங்கிய கும்பல் ஒன்றினை களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றவியல் விசாரணைப்பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இவர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மீரிகம , பிலியந்தலை , ஹொரணை மற்றும் களுத்துறை போன்ற பகுதிகளில் இடம்பெற்ற பல கொள்ளைச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 7 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் மற்றும் இரண்டு புத்தர் சிலைகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் குறித்த நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 400 வருடங்களின் பின்னர் ஏற்படவுள்ள பேரழிவு! இலங்கையை பாதிக்குமா?
Next post குத்தாலம் அருகே விவசாயி வீட்டுத் தோட்டத்தில் விளைந்த 11 அடி உயர கீரைத்தண்டு…!!