கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் போலீஸ் காவலில் மர்ம முறையில் மரணம்…!!
Read Time:1 Minute, 11 Second
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களில், ஒருவர் தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர் காளிமுத்து. போலீசார் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த காளிமுத்து நேற்று மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை கடுமையாக அடித்து உதைத்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த காளிமுத்து இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரிக்கை விடுத்து உள்ளார்.
Average Rating