கேரளாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் போலீஸ் காவலில் மர்ம முறையில் மரணம்…!!

Read Time:1 Minute, 11 Second

201610100819498382_tamil-nadu-man-found-dead-in-police-custody-in-kerala_secvpfகேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலசேரி நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களில், ஒருவர் தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். அவரது பெயர் காளிமுத்து. போலீசார் அவர்கள் இருவரையும் போலீஸ் நிலையத்தில் காவலில் வைத்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் போலீஸ் காவலில் இருந்த காளிமுத்து நேற்று மர்மமான முறையில் இறந்தார். போலீசார் அவரை கடுமையாக அடித்து உதைத்ததால் அவர் இறந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த காளிமுத்து இறந்தது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கோரிக்கை விடுத்து உள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரீங்காரமிட்டு நடனமாடி மனதை மயக்கும் குட்டி குட்டி பறவைகள்…!! வீடியோ
Next post வாசனை திரவிய பெண் தொழில் அதிபர் கொலை வழக்கில் பஞ்சாப்பை சேர்ந்தவர் கைது…!!