அநுராதபுரத்தில் இரகசிய சித்திரவதை முகாம் – வெளிவரும் அதிர்ச்சி தகவல்…!!
Read Time:1 Minute, 11 Second
காணாமல் ஆக்கப்பட்டுள்ள பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய சித்திரவதை முகாமொன்று அநுராதபுரம் பிரதேசத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தப்பட்டு காணாமல்போனோரை தேடிக் கண்டறியும் சங்கத்தின் தலைவி ஜே.நாகேந்திரன் ஆஷா இதனை ஊடகம் ஒன்றுக்கு இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தமது உறவுகளை கடத்திய படை அதிகாரிகளை ஆதாரத்துடன் அடையாளப் படுத்திய போதிலும் அவர்களுக்கு எதிராக அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தாம் கேள்வியுற்ற இந்த இரகசிய முகாம் தொடர்பில் முறையிடுவதால் எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. இவ்வாறான, நிலையிலேயே தாம் ஊடகங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவிப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
Average Rating