விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்தவர் திடீர் மரணம்…!!
Read Time:1 Minute, 7 Second
நானுஓயா – கிளாரன்டன் தோட்ட பகுதியில் நேற்று டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்திருந்தனர்.
இதில் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக நேற்று அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இன்று (13) அதிகாலை திடீரென உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த விபத்தில் படு காயமடைந்த ஏனையவர்கள் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, நானுஓயா பொலிஸார் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating