வளசரவாக்கத்தில் வீட்டில் ஆன்-லைனில் விபசாரம்: தரகர்கள் 2 பேர் கைது…!!

Read Time:2 Minute, 5 Second

201610140757262696_two-brokers-arrested-adultery-on-line-at-home-in_secvpfசென்னை வளசரவாக்கம் பகுதியில் வீட்டில் பெண்களை வைத்து ஆன்-லைனில் விபசாரம் நடைபெறுவதாக வந்த தகவலின்பேரில் விபசார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் வளசரவாக்கம், சாஸ்தா நகர், 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அந்த வீட்டில் 3 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் இருந்தனர். அவர்களில் ஒரு வாலிபர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை தலைமைக்காவலர் ஜான்சன் துரத்திச் சென்று பிடிக்க முயன்றார்.

அப்போது அந்த வாலிபர், அருகில் கிடந்த கல்லை எடுத்து தலைமைக்காவலர் ஜான்சன் மீது வீசினார். இதில் அவரது தலையில் கல் பட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவர் அந்த வாலிபரை விரட்டிச்சென்று அவருடன் தரையில் கட்டிப்புரண்டு சண்டை போட்டு மடக்கிப் பிடித்தார்.

விசாரணையில் அவரது பெயர் மிதுன் (வயது 24) என்பது தெரிந்தது. இதையடுத்து மிதுன் மற்றும் அந்த வீட்டில் இருந்த செல்வக்குமார் (55) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

தரகர்களான செல்வக்குமார், மிதுன் இருவரும் வீட்டில் பெண்களை வைத்து ஆன்-லைனில் விபசாரம் செய்து வந்தது தெரிந்தது. மிதுன் கல் வீசி தாக்கியதில் காயம் அடைந்த தலைமைக்காவலர் ஜான்சன், தப்பி ஓடும் போது காயம் அடைந்த மிதுன் இருவரும் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி கட்டிடத்தில் இருந்து விழுந்து மாணவி பலியான விவகாரம்: பள்ளி முதல்வர் உள்பட 2 பேர் கைது..!!
Next post பசிபட்டினியால் வாடுபவர்கள் அதிகம் உள்ளோர் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 97வது இடம்…!!