455 ஆவது பொலிஸ் நிலையம் வவுனியாவில் திறந்து வைப்பு…!!

Read Time:1 Minute, 21 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-3வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையம் இன்று(15) பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்து மத வழிபாடுகளுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் சர்வமத பிரார்த்தனைகள் இடம்பெற்றதோடு பொலிஸ் அணிவகுப்பும் நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன் பதிவுப்புத்தகத்தில் பொலிஸ் மா அதிபர், வட மாகாணசபை உறுப்பினர்களான ஏ. ஜயதிலக, இ. இந்திரராஜா மற்றும் சுதந்திர கட்சியின் வன்னி அமைப்பாளர் வாசல ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்தோடு இந்த நிகழ்வில் வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஏ. சரத்குமார, வன்னி பிரதி பொலிஸ்மா அதிபர் டி. தென்னக்கோன், வட மாகாணசபை உறுப்பினரான செ. மயூரன், உட்பட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.

இது இலங்கையின் 455 ஆவது பொலிஸ் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமானப் படை வீரர் ஒருவர் தற்கொலை…!!
Next post அம்மாக்கு ஜால்ரா அடித்த திவ்யாவை மரண ஓட்டு ஓட்டும் இணையவாசிகள்….!! வீடியோ