காதல் ஜோடிகளிடம் பணம் பறித்த பொலிஸ் பரிசோதகர்…!!
Read Time:46 Second
களுத்துறை நகரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதல் ஜோடிகளிடம் பலவந்தமாக பணத்தை பெற்றுக்கொண்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகர வாசிகள் வழங்கிய தகவலுக்கு அமைய சந்தேக நபரை தாம் கைது செய்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களுத்துறை – மக்கொன பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
Average Rating