சிவகாசி அருகே முதல்-அமைச்சருக்காக நடந்த பூஜையில் பங்கேற்ற பெண் திடீர் பலி…!!

Read Time:1 Minute, 42 Second

201610171825120246_cm-jayalalitha-temple-pooja-participate-woman-sudden-died-in_secvpfமுதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

நேற்று பவுர்ணமி தினத்தில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயணன் பெருமாள் கோவிலில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்காக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த வழிபாட்டில் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பெண்கள் திரளாக பங்கேற்றனர். பூஜை முடிந்து அனைவரும் கோவிலில் இருந்து இறங்கி கொண்டிருந்தபோது திருத்தங்கல் முருகன் காலனியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரது மனைவி பொன்னுத்தாய் (வயது50) திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனே அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் அவரை அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதால் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

கோவில் பூஜையில் பங்கேற்ற பெண் மாரடைப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாகரில் கல்லூரி மாணவியை கற்பழித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்: முன்னாள் போலீஸ்காரர் உள்பட 3 பேர் கைது…!!
Next post மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி…!!