மர்ம காய்ச்சலுக்கு 3 வயது குழந்தை பலி…!!
Read Time:1 Minute, 7 Second
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த நாராயணம் பாளையம் அருகே உள்ள கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் ரத்தினசாமி.
லாரி பாடி கட்டும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஹரிஹரசுதன் (வயது 3). கடந்த 10 நாட்களாக இவனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது.
இதனால் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றான். பின்னர் அவன் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இன்று அதிகாலை அவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
இதே பகுதியில் மேலும் 3 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Average Rating