இரு பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக குத்திவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்…!!

Read Time:1 Minute, 28 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-2பதுளை – மடுல்சீமை, ஊவாக்கல தோட்ட பகுதியில் பெண் ஒருவர் தனது இரு பச்சிளம் குழந்தைகளையும் கத்தியால் குத்தியதோடு தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் குறித்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளதாகவும், குடும்பத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் மடுல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு வயது மற்றும் ஆறு மாதங்களேயான இரு பச்சிளம் குழந்தைகளையே குறித்த பெண் தாக்கியதோடு தன்னைத் தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ள இரண்டு பிள்ளைகளும், குறித்த பெண்ணும் பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக மடுல்சீமை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அளவெட்டி வாள்வெட்டு வழக்கு! மேன் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தார் இளஞ்செழியன்…!!
Next post மலேசியாவில் கேஸ் பலூன்கள் வெடித்து 31 பேர் காயம்: டெரங்கனு மாநிலத்தில் பலூன்களுக்கு தடை…!!