குழந்தைகளை கத்தியால் குத்திய கொடூர தாய்க்கு விளக்கமறியல்…!!
தமது இரண்டு பிள்ளைகளை கத்தியால் குத்தி விட்டு தன்னையும் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்திக்கொண்ட பெண்ணொருவர் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மடுல்சீமை, ஊவா கேலேவத்தை பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரையே பதுளை நீதவான் ருவாந்திகா மாரசிங்க விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த பெண் நேற்றிரவு தூங்கிக் கொண்டிருந்த மூன்று மாத குழந்தையான மகனையும் இரண்டரை வயதான மகளையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இதன் பின்னர் அந்த பெண் தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்டுள்ளார். காயமடைந்த இவர்களை அயலவர்கள் பதுளை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரான பெண் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண்ணின் கணவர் கொழும்பில் தனியார் வைத்தியசாலை பணிப்புரிந்து வருகிறார்.
பெண் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளரா என்ற சந்தேகத்தின் பேரில் அவரை பதுளை வைத்தியசாலையின் மனநல பிரிவுக்கு மாற்றியுள்ளனர்.
Average Rating