யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்…!!

Read Time:2 Minute, 13 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 அளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த மாணவர்கள் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், யாழ். நகரில் அமைந்துள்ள மாவட்ட செயலக வாயில்களுக்கு முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் இந்த போராட்டத்தை பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதேசத்தில் மேற்கொள்ளப்படவிருந்த போதும் அரச நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நோக்கில் அரச செயலகம் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக யாழ்ப்பாண செயலகத்தின் பணியாளர்கள் செயலகத்துக்குள் செல்ல முடியாத நிலையில் செயலகப்பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, குறித்த போராட்டம் இன்று 11.00 மணி வரையும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 1500ற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளதாவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குடித்துவிட்டு தண்டவாளத்தில் தள்ளாடியவரை காப்பாற்றிய ரயில்வே தொழிலாளி…!! வீடியோ
Next post யாழில் நடக்கும் மர்மங்கள் என்ன? உயர் பொலிஸ் அதிகாரி பரபரப்பு தகவல்…!!