கொழும்பில் பலியாகிய நான்கு இளைஞர்கள் – விபரம் வெளிவந்தது…!!
யாழில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் மூழ்கச்செய்துள்ளது. இதிலிருந்து மீண்டு வருவதற்கு முன்னர் கொழும்பில் நான்கு இளைஞர்களின் மரணம் அடுத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பு – மட்டக்குளி, சமித்புற பகுதியில் நேற்று இரவு பாதாள உலக குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆறு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் தேசிய வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு இலக்காகி பலியானவர்களை தற்போது அடையாளம் கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது பாதாள உலக குழுவினருக்கிடையில் போதைவஸ்து தொடர்பாக ஏற்பட்ட மோதலே காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகிய 4 இளைஞர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் மட்டக்குளியைச் சேர்ந்த,
1.நுவன் சஞ்ஜீவ பெரேரா (வயது 29)
2.மொஹமட் நசார் (வயது 29)
3.பிரசாத் சத்துரங்க பெரேரா (வயது 24)
4.தெனுவன் (வயது 26)
ஆகியோரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating