நீடாமங்கலம் அருகே 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது…!!
Read Time:57 Second
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள வீரவநல்லூர் காலனி தெருவை சேர்ந்த மாற்றுத் திறனாளியான 13 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் சரண்ராஜ் (21) அங்கு வந்தார். அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நீடாமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சரண்ராஜை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating