சுகாதார அமைச்சின் ஊழியர்கள் கூரை மீது ஏறி ஆர்ப்பாட்டம்…!!
சுகாதார அமைச்சில் பணிபுரியும் ஊழியர்கள் சுகாதார அமைச்சின் கூரைமேல் ஏறி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
சம்பள உயர்வுக் கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சில் ஒரே திணைக்களத்தில் 5 ஆண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு சுகாதார அமைச்சுக்குள்ளேயே திணைக்கள இடமாற்றம் வழங்கப்பட்டது.
ஆனால் குறித்த ஊழியர்கள், இடமாற்றம் வழங்கிய திணைக்களத்தில் பணியாற்றாமல் கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றிய திணைக்களத்திலேயே பணியாற்றியுள்ளனர்.
இதனால், இடமாற்றத்தை மீறி அதே திணைக்களத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்தை சுகாதார அமைச்சு வழங்கவில்லை.
மேலும் இடமாற்றத்தை ஏற்றுக்கொண்டு குறித்த திணைக்களங்களில் கடமையாற்றினால் மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது.
இதன் காரணமாகவே தங்களது இம் மாத சம்பளத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக சுகாதார அமைச்சு அமைந்துள்ள பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Average Rating