பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகளை வெடித்தனனால் ஏற்பட்ட விணை..!!
Read Time:1 Minute, 24 Second
பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுக்களை வெடிக்க வைத்த திம்புளை – டெரிக்லயர் தோட்டத்தினை சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று(29) படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் 9 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியதாக குறிப்பிடப்படுகின்றது
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் நாவலப்பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நாடெங்கிலும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் வேளையில் ஆங்காங்கே இதுப்போன்ற விபத்துகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. எனவே பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுள் வெடிப்பதை தவிர்த்து கொள்வதானால் இதுப்போன்ற விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்ப்பாக்கப்படுகின்றது
Average Rating