வவுனியாவில் காற்றுடன் கூடிய கடும் மழை! முறிந்து விழுந்த மரத்தினால் போக்குவரத்து தடை…!!
Read Time:49 Second
வவுனியாவில் நேற்று இரவு காற்றுடன் கூடியதாக பெய்த கடும் மழையினால் பாதையில் மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீண்டநாட்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து நேற்றைய தினம் மாலை முதல் கடும் மழை பெய்தது.
இதன்போது இடி, மின்னல் தாக்கம் மற்றும் கடும் காற்றின் தாக்கமும் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் மின்சாரத் தடைகளும் அவ்வப்போது ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Average Rating