வாகன விபத்தில் இளைஞன் பலி…!!
Read Time:1 Minute, 0 Second
திம்பிரிகஸ்யாய பகுதியில் நேற்று(31) இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், மோட்டார் வாகனத்துடன் முச்சக்கர வண்டி ஒன்று மோதியதாலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கல்கிஸ்ஸ பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மோட்டார் வாகன ஓட்டுனரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த பயணிகள் மற்றும் சாரதி ஆகியோர் பலத்த காயங்களுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.
Average Rating