புலம்பெயர்ந்தவர்கள் பயணித்த படகு விபத்து…! 18 பேர் பரிதாபமாக பலி….!!

Read Time:1 Minute, 18 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90இந்தோனேசியாவில் 93 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணித்த படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியாவில் இருந்து இந்தோனேசியாவிற்கு பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

தஞ்சுங் பேபாம் என்ற இடத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பெரிய அலைகள் மற்றும் பலத்த காற்று வீசியதில் படகு மூழ்கியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்தை தொடர்ந்து ஹெலிகொப்டர் உதவியுடன் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை, 39 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைத்தியசாலைக்குள் புகுந்த வாள்வெட்டு குழு..! பருத்தித்துறை வைத்தியசாலையில் பதற்றம்…!!
Next post கொழும்பு நகரின் பெரும் துயரம்…! கண்டுகொள்ளாத அதிகாரிகள்…!!