ஏழே நாட்களில் வெள்ளையாகணுமா? இதோ அருமையான வழிகள்…!!

Read Time:5 Minute, 1 Second

625-0-560-350-160-300-053-800-668-160-90அழகாக இருக்க வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது. அதிலும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்று நினைப்போர்கள் எண்ணிக்கை ஏராளம்.

தங்கள் சரும நிறத்தை அதிகரிக்க பலரும் பலவிதமான க்ரீம்களைப் பயன்படுத்தி முயற்சிகளை செய்து கொண்டிருந்தாலும் அது நிரந்தரமான தீர்வாக இருக்காது.

எனவே ஒருசில இயற்கை வழிகளை முயற்சித்தால், அதற்கு கிடைக்கும் பலன்கள் நிரந்தர தீர்வாக இருக்கும்.

குங்குமப்பூ

குங்குமப்பூவை சிறிதளவு எடுத்து அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, பின் சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தின் நிறம் வெள்ளை நிறமாவதை நன்கு காணலாம்.

தயிர்

தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கும் தன்மை கொண்டவை. எனவே வெறும் தயிரை முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் கழித்து முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் பால் பவுடர்

1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் உள்ள கருமை நீங்கி சருமத்தில் வெள்ளை நிறம் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காய் மற்றும் தேன்

வெள்ளரிக்காய் சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தினமும் தடவி வந்தால், முகத்தில் உள்ள சரும வறட்சி நீங்குவதோடு, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை வாரத்திற்கு இரண்டு முறைகள் முகத்தில் தடவி ஊற வைத்து பின் கழுவி வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கருமைகள் முழுமையாக நீங்கி, முகம் பொலிவாக மற்றும் வெள்ளையாக இருக்கும்.

தக்காளி மற்றும் தயிர்

தக்காளி பழத்தை நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது தயிர் மற்றும் ஓட்ஸ் பொடி சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

பச்சை பால் மற்றும் ரோஸ் வாட்டர்

தினமும் இரவில் படுக்கும் முன் பச்சை பாலில் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து மறுநாள் காலையில் கழுவி வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கச் செய்யும்.

தக்காளி மற்றும் எலுமிச்சை

தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றை சமஅளவு கலந்து அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.

இதனால் சருமத்தின் எண்ணெய் பசையை கட்டுப்படுத்துவதோடு, சருமமும் வெள்ளையாகும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை

தேனுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் நீக்கப்பட்டு, சருமத்தின் நிறம் வெள்ளையாகும்.

இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மகளிர் பக்கம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்…
https://www.nitharsanam.net/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹன்சிகா…!!
Next post சுய இன்பம் காண்பதால் ஆண்களின் தலைமுடி கொட்டுமா?