ரூ.50 கோடி மதிப்புள்ள ஓவியம் திருட்டு..!!
மும்பையில் உள்ள நிர்லான் நிறுவன கட்டிடத்தில் பிரபல ஓவியர் வி.எஸ்.காய்தோதேவின் ஓவியம் வைக்கப்பட்டு இருந்தது. இந்த ஓவியத்தின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த ஓவியம் மாயமானது.
இந்தநிலையில் நிர்லான் நிறுவனத்தின் பங்குதாரர் மாதுர்தாஸ் சில நாட்களுக்கு முன் நியூயார்க்கில் நடந்த ஓவிய கண்காட்சி ஒன்றை பார்வையிட்டார். அப்போது தனது நிறுவன கட்டிடத்தில் இருந்து மாயமான ஓவியம் போன்றதொரு ஓவியம் அங்கு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.
இதையடுத்து அவர் தனது நிறுவன கட்டிடத்தில் திருட்டுப்போன ஓவியம் குறித்து ஒர்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது நிறுவன கட்டிடத்தில் இருந்து மாயமான ஓவியமும், நியூயார்க் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த ஓவியமும் ஒன்றுதானா? என்பதை கண்டறியுமாறு கூறியுள்ளதாக தெரிகிறது.
இந்த புகார் குறித்து ஒர்லி சீனியர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விராக் பார்கர் கூறும்போது, ‘மாதுர்தாசின் புகார் குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.
Average Rating