சிரியாவில் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்: 20 பேர் பலி…!!
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே ஒரு பக்கம் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இன்னொரு பக்கம் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். அமைப்பினருக்கும், அமெரிக்க கூட்டுப்படையினருக்கும் எதிராக மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஐ.எஸ். அமைப்பினரின் தலைநகர் என கருதப்படுகிற ராக்கா நகருக்கு அருகேயுள்ள அல் ஹெய்ஷா என்ற கிராமத்தின்மீது அமெரிக்க கூட்டுப்படையினர் நேற்று முன்தினம் கடுமையான வான்தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் 9 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட அப்பாவி மக்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். 32 பேர் படுகாயம் அடைந்தனர்.
அதே நேரத்தில் அமெரிக்க கூட்டுப்படைகளுக்கு ஆதரவான சிரிய ஜனநாயக படைகள், இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறுத்துள்ளன.
ஆனால் இந்த தாக்குதலில் பலியானவர்களையும் சேர்த்து சிரியாவில் 2014-ம் ஆண்டு முதல் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்தி வருகிற தாக்குதலில் பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 680 ஆக உயர்ந்துள்ளதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது.
Average Rating