திருமணம் செய்வதாக கூறி பட்டதாரி பெண்ணிடம் உல்லாசம்: வாலிபர் கைது…!!
கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை பழத்தோட்டம் காந்தி நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் ஹேமலதா (வயது 23). இவர் எம்.எஸ்.சி., முடித்து விட்டு பி.எட். படித்து வருகிறார்.
இந்நிலையில் ஹேமலதா துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
நானும் எனது உறவினரான நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மணிகண்டன் (27) என்பவரும் காதலித்து வந்தோம். அவர் பில்டிங் காண்டிராக்டராக உள்ளார்.
கடந்த 3.10.16 அன்று கோத்திகிரியில் இருந்து வந்த மணிகண்டன் நாளை உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் காரில் என்னுடன் வா என்று அழைத்தார். அதன்படி நானும் அவருடன் காரில் சென்றேன்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் இருவரும் தங்கினோம். அப்போது என்னை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தினார். இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
அதன்பிறகு உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது. மீறி போலீசில் புகார் செய்தால் உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டினார். காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உல்லாசம் அனுபவித்த காதலன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அதில் கூறியிருந்தார்.
வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அமுதா கட்டிட காண்டிராக்டர் மணிகண்டனை கைது செய்தார்.
காதலி ஹேமலதாவை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று மருத்துவ பரிசோதனை செய்ய உள்ளனர்.
Average Rating