நடிகை சபர்ணா தற்கொலையில் சந்தேகம்: தந்தை பரபரப்பு தகவல்…!!
Read Time:1 Minute, 15 Second
நடிகை சபர்ணா மரணத்தில் சந்தேகம் உள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் அவரது தந்தை பொலிசாருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை மற்றும் வெள்ளித்திரை நடிகையான சபர்ணா நேற்று மர்மமான முறையில் அவரது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரது தந்தை ஆனந்த குமார் கூறுகையில், கடந்த சில நாட்களாக தமிழில் சீரியல் வாய்ப்புகள் கிடைக்காமல் சபர்ணா மன உளைச்சலில் இருந்ததாக கூறினார்.
இருப்பினும் சபர்ணா உயிரிழந்த அறையில் சிகரெட் துண்டுகள் மற்றும் மதுபாட்டில்கள் கிடந்துள்ளது.
இது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இது குறித்து பொலிசார் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating