பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு…!!
நயன்தாரா தமிழ், தெலுங்கு பட உலகில் நம்பர்-1 கதாநாயகியாக இருக்கிறார். இரு மொழிகளிலுமே முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து விட்டார். அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நயன்தாரா நடித்து திரைக்கு வந்த அனைத்து படங்களுமே நல்ல லாபம் பார்த்துள்ளன.
இதனால் அவரையே தங்களுக்கு ஜோடியாக்கும்படி மூத்த கதாநாயகர்கள் இயக்குனர்களிடம் வற்புறுத்துகிறார்கள். ஆனால் நயன்தாரா அவர்களுடன் நடிக்க மறுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காதல் காட்சிகளில் மட்டுமே பெரிய நடிகர்கள் தன்னை பயன்படுத்துவதாகவும் தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிப்பது இல்லை என்றும் அவர் கருதுவதாக கூறப்படுகிறது. தன்னை முன்னிலைப்படுத்தும் கதைகளில் மட்டுமே இனிமேல் நடிப்பது என்று அவர் முடிவு செய்து இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சமீபத்தில் தெலுங்கில் உச்ச நடிகராக இருக்கும் பவன்கல்யாண் ஜோடியாக நடிக்க நயன்தாராவை அழைத்தனர். அதிக சம்பளம் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால் நயன்தாரா அதில் நடிக்க மறுத்துவிட்டார். சிரஞ்சீவி ஜோடியாக கைதி எண்.150 என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தையும் தவிர்த்து விட்டார். இதுபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் ஒதுக்கி விட்டார்.
தமிழிலும் காதல் காட்சிகளில் முன்னணி கதாநாயகர்களுடன் நடிக்கும்படி வரும் அழைப்புகளை மறுத்து வருகிறார். இளம் நடிகர்கள், பிரபலமாகாத தொழில் நுட்ப கலைஞர்களுடன் அவர் நடித்த மாயா என்ற பேய் படமும் வளரும் கதாநாயகன் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த நானும் ரவுடிதான் படமும் வசூல் சாதனை படைத்தது. எனவே புதியவர்கள் படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறார்.
தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் அதர்வாவுடன் நடிக்கிறார். பெரிய நடிகர்கள் இல்லாத ‘டோரா’ என்ற திகில் படத்திலும் மோகன்ராஜா டைரக்ஷனில் சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடிக்கிறார்ச். கோபி நாயனார் இயக்கும் படத்தில் கலெக்டர் வேடத்தில் நடிக்கிறார். மேலும் இரண்டு புதியவர்கள் படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.
Average Rating