உலக நாடுகளில் தென்பட்ட “சுப்பர் மூன்” ; இன்று இலங்கையில் ; காணத்தவறாதீர்கள்…!!
Read Time:1 Minute, 18 Second
சுமார் 70 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றிய “சுப்பர் மூன்” (வழமையை பெரிதாக தோன்றக்கூடிய நிலவு) நேற்று இரவு அமெரிக்கா மற்றும் சில நாடுகளில் தோன்றியுள்ளது.
இந்த அரிய காட்சியின் புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது.
நிலவு பூமிக்கு நெருக்கமாக வரும்போது நிலவானது வழமையை விட பெரிதாக தோன்றும். இதுவே “சுப்பர் மூன்” என அழைக்கப்படுகின்றது.
குறித்த நிலவானது இம்முறை வழமையை விட 14 மடங்கு பெரிதாக தோன்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த நிலவு அமெரிக்கா போன்ற சில நாடுகளில் பார்க்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் இன்று இரவு 7.30 மணியளவில் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று தோன்றிய “சுப்பர் மூன்” இன் அற்புதமான படங்கள் இணையத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றன.
Average Rating