எல்லை தாண்டி தாக்கிய இந்திய வீரர்கள் 11 பேரை கொன்றோம்: பாகிஸ்தான்..!!
Read Time:1 Minute, 20 Second
எல்லை தாண்டி தங்கள் நாட்டிற்குள் நுழைந்த இந்திய ராணுவத்தினர் 11 பேரை பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கொன்றுள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி ரஹீல் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரஹீல் ஷெரீப் இந்த தகவலை தெரிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில்:-
எங்களுடைய வீரர்கள் 7 பேர் எல்லையில் பலியான அன்று, நாங்கள் இந்திய வீரர்கள் 11 பேரை கொன்றோம். கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் இந்திய வீரர்கள் 40-44 பேரை கொன்றுள்ளோம்.
ஆனால் இந்திய ராணுவம் இதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இந்தியா தங்கள் நாட்டு வீரர்கள் உயிரிழந்ததை தைரியமாக சொல்ல வேண்டும். பாகிஸ்தான் தயக்கமில்லாமல் தைரியமாக ஒப்புக் கொள்ளும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Average Rating