கங்கை ஆற்றில் மூழ்கி மூன்று குழந்தைகள் பரிதாப பலி…!!
Read Time:1 Minute, 21 Second
பீகார் மாநிலம், சரன் மாவட்டத்தில் உள்ள திரிலோக் சக் என்ற கிராமத்தை சேர்ந்த சில குழந்தைகள் இந்த கிராமத்தையொட்டி பாய்ந்துச் செல்லும் கங்கை ஆற்றில் இன்று வழக்கம்போல் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிய ராஜு குமார், சன்னி குமார், பிரின்ஸ் குமார் ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்து விரைந்துவந்த உள்ளூர்வாசிகள் ஆற்றில் நீந்திச்சென்று குழந்தைகளை தேடினர்.
இருப்பினும், அவர்களை உயிருடன் மீட்க இயலவில்லை. பின்னர், தண்ணீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த மூன்று குழந்தைகளின் பிரேதங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திக்வாரா பகுதி போலீசார், பிரேதங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Average Rating