‘அச்சம் என்பது மடமையடா’ வெற்றிக்கு ரசிகர்கள் தான் காரணம்:சிம்பு..!!

Read Time:1 Minute, 57 Second

201611191339461340_fans-is-the-reason-for-achcham-yenbadhu-madamaiyada-success_secvpfகவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு-மஞ்சிமாமோகன்,சதீஷ் உள்பட பலர் நடித்திருக்கும் படம் ‘அச்சம் என்பது மடமையடா’ ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இந்த படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில்,சிம்பு சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார். பின்னர் அவர் பேசும் போது, “ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து இந்த படத்தை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதில் நடிக்க வாய்ப்பு தந்த கவுதம் மேனனுக்கு நன்றி.

இப்போது நிலவும் பணப்பிரச்சினைகளையும் மீறி படம் நல்ல வசூலை பெற்றிருப்பதாக சொல்கிறார்கள். இந்த வெற்றிக்கு காரணம் நிச்சயமாக நாங்கள் அல்ல ரசிகர்கள் தான் காரணம். இதுஎன்னுடைய வெற்றி அல்ல மக்களுடைய வெற்றி. இந்த நேரத்திலும் அனைவரும் வந்து படம் பார்ப்பது மனதை உருக்கி விட்டது.

ஏ.ஆர்.ரகுமான் சார் அற்புதமான இசையை கொடுத்திருக்கிறார். ஒட்டுமொத்த படக்குழுவும் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.கிளைமாக்ஸ் எப்படி இருக்குமோ என்று எனக்கே பயமாக இருந்தது. அதை தியேட்டரில் பார்த்தவர்களுக்குதான் அதன் அருமை தெரியும். இந்த நேரத்தில் இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவன் இல்லையென்றால் நாம் இல்லை” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெத்தலி மீன் உடலுக்கு ஆரோக்கியமா?
Next post ஐரோப்பா சென்ற யாழ் இளைஞனை அடித்துக் கொலை செய்த முகவர்…!!