டெல்லியில் ஓடும் ரெயிலில் பெண் கற்பழிப்பு: போலீசார் மடக்கி பிடித்தனர்..!!

Read Time:2 Minute, 16 Second

201611201657529556_delhi-running-train-girl-torture-police-caught_secvpfபீகார் மாநிலத்தை சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் பீகாரில் இருந்து டெல்லிக்கு ரெயிலில் வந்தார். டெல்லியில் நடந்த உறவினர் வீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் தனியாக பயணம் செய்தார். பெண்கள் பெட்டியில் அமர்ந்து இருந்தார்.

அதிகாலை நேரத்தில் ரெயில் டெல்லி அருகே வந்தது. அப்போது ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்த பெட்டியில் இருந்த பெண் பயணிகள் இறங்கினார்கள். அவருடன் சேர்த்து 5 பெண்கள் மட்டுமே அந்த பெட்டியில் இருந்தனர்.

டெல்லி புறநகர் பகுதியான சக்தரா என்ற இடத்தில் மற்ற 4 பெண்களும் இறங்கி விட்டனர். இவர் மட்டும் தனியாக இருந்தார். ரெயில் அங்கிருந்து புறப்படும் போது, 3 ஆண்கள் திடீரென அந்த பெட்டிக்குள் ஏறினார்கள். அவர்களில் இருவர் அந்த பெண் வைத்திருந்த பைகளை பறித்து சென்று கீழே இறங்கி ஓடி விட்டனர்.

ஆனால், ஒருவன் மட்டும் அங்கேயே இருந்தான் அவன் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தான். இதற்குள் ரெயில் பழைய டெல்லி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அங்கு 2 போலீசார் பெண்கள் பெட்டியில் ஏறி சென்று பார்த்தனர். அப்போது அந்த வாலிபர் பெண்ணை பலாத்காரம் செய்தபடி இருந்தார். உடனே போலீசார் அவனை மடக்கி பிடித்தனர்.

அவனது பெயர் ஷாபாஷ் (வயது 25). டெல்லியை சேர்ந்தவன் என்பது தெரிய வந்தது. போலீசார் தாக்கியதில் அவனுக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. கற்பழிக்கப்பட்ட பெண்ணையும், வாலிபரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொல்ல முயற்சி: 2 வாலிபர்கள் கைது..!!
Next post இப்படி ஒரு ஓவியத்தை பார்த்திருக்கவே மாட்டிங்க…!! வீடியோ