பள்ளிக்குள் புகுந்து பஸ்சுக்கு தீ வைப்பு: மர்ம கும்பல் அட்டூழியம்..!!

Read Time:3 Minute, 31 Second

201611231201071526_mystery-gangs-entered-the-school-and-for-bus-arson-near_secvpfராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சி.எஸ்.ஐ. கிறிஸ்துவ அமைப்புக்கு சொந்தமான மெட்ரிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இவர்களின் வசதிக்காக, பள்ளி மூலம் 5 பஸ்கள் இயக்கப்பட்டது.

நேற்று மாலை பள்ளி வகுப்பு நேரம் முடிந்தவுடன் மாணவ, மாணவிகளை அவரவர் வீடுகளுக்கு கொண்டுச் சென்று இறக்கி விட்ட பிறகு, 5 பஸ்களும் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டன.

இரவு காவலாளி திருவலம் குப்பத்தா மோட்டூர் கிராமத்தை சேர்ந்த மணி (வயது 62) என்பவர் வழக்கம் போல் நேற்றிரவும் பணியில் இருந்தார். காவலாளி வயது முதிர்ந்தவர் என்பதால் நள்ளிரவில் கொஞ்ச நேரம் அயர்ந்து தூங்கினார்.

இன்று அதிகாலை வரை காவலாளி உறக்கத்தில் இருந்து எழவில்லை. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர், இன்று அதிகாலை 4.30 மணியளவில் பள்ளி சுற்றுச்சுவரை தாவி குதித்து வளாகத்திற்குள் புகுந்தனர்.

அங்கிருந்த பள்ளி பஸ் ஒன்றுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். 5 பஸ்களும் சற்று இடைவெளி விட்டு நிறுத்தப்பட்டு இருந்தன. இதனால் தீ வைத்து கொளுத்தப்பட்ட பஸ்சில் இருந்து மற்ற 4 பஸ்களுக்கும் தீ பரவவில்லை.

சதி திட்டத்தை அரங்கேற்றி மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியது. தீ மளமளவென பற்றி எரிந்ததில், பஸ்சின் டயர்கள் ‘‘டமார் டமார்’’ என வெடித்தது. பயங்கர சத்தம் கேட்டவுடனேயே தூக்கத்தில் இருந்த காவலாளி மணி திடுக்கிட்டு எழுந்தார்.

பஸ் தீயில் எரிவதை பார்த்து அதிர்ந்து போனார். காவலாளி உடனடியாக, ராணிப்பேட்டை தீயணைப்பு துறைக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு வருவதற்குள் பள்ளி பஸ் முற்றிலும் எரிந்து நாசமானது.

ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர் முத்தீஸ்வரன் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து தீ வைத்து எரிக்கப்பட்ட பஸ்சை பார்வையிட்டு காவலாளியிடம் விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து பள்ளி தாளாளர் ஜான் திருத்துவதாஸ், சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்சுக்கு தீ வைத்த மர்ம கும்பலை தேடி வருகிறார்கள்.

பள்ளி நிர்வாகத்துடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்ததா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமியை தாயாக்கிய 13 வயது சிறுவன்…!!
Next post 3 வீரர்கள் படுகொலை: பாகிஸ்தான் நிலைகளின் மீது இந்தியப் படையினர் ஆவேச தாக்குதல்…!!