ஆபத்து என உதவிக்கு அழைத்த பொதுமக்கள்: பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!
சுவிட்சர்லாந்து நாட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதாக பொலிசாருக்கு கிடைத்த அவசர தகவலை தொடர்ந்து நிகழ்ந்த சம்பவம் பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சுவிஸின் St. Gallen நகரை சேர்ந்த பொலிசாருக்கு கடந்த புதன்கிழமை அன்று அவசர தகவல்கள் கிடைத்துள்ளது.
அதில், முகமூடி அணிந்துக்கொண்டு நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவதால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
தகவலை பெற்ற பொலிசார் மோப்ப நாய்கள் உள்பட ஒரு பொலிஸ் பட்டாளத்தை அழைத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சில மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு ஓரிடத்தில் முகமூடி அணிந்த நிலையில் நபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நிற்பதை பார்த்து பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நபரை சுற்றி வளைத்த பொலிசார் துப்பாக்கியை கீழே போடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அப்போது, திடீரென முகமூடி ஆடைகளை கழட்டிய 12 வயது சிறுவன் துப்பாக்கியையும் கீழே போட்டுள்ளான்.
சாலையில் நிற்பது சிறுவன் என்றும் அவனிடம் இருந்தது விளையாட்டு துப்பாக்கி எனவும் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
சிறுவனிடம் விசாரணை செய்தபோது பள்ளியில் நடக்கவுள்ள நாடகத்திற்காக இதுபோன்று பயிற்சியில் ஈடுப்பட்டதாக அவன் கூறியுள்ளான்.
எனினும், சிறுவனின் பெற்றோருக்கு தகவல் அனுப்பிய பொலிசார் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், பெற்றோர் வந்ததும் ‘பொது இடத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுப்பட்டால் அது சிறுவனுக்கு ஆபத்தாக முடியும்’ என அறிவுரை கூறிய பொலிசார் விளையாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்துவிட்டு சிறுவனை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Average Rating