தலித் பெண்ணை காதலித்தற்கு எதிர்ப்பு: பெற்றோர் மற்றும் சகோதரியை கொன்ற வாலிபர்…!!
தமிழ்நாட்டில் தலித் பெண் மீதான காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரியை வாலிபர் ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூருக்கு அருகே தான் இந்த கொடூரச் செயல் நிகழ்ந்துள்ளது.
காகன்கரை என்ற கிராமத்தில் மோகன்(57) மற்றும் ராஜேஷ்வரி(55) என்ற தம்பதி தமிழரசன்(25), சுகன்யா(22) என்ற பெயருடைய பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழரசன் இதே கிராமத்தில் வசித்து வரும் தலித் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் அறிந்த அவரது சகோதரியான சுகன்யா தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தலித் பெண்ணை காதலிப்பதற்கு தமிழரசனின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தமிழரசனை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திவிட்டு தமிழரசன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
திங்கள் விடியல் காலை 4.30 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்த தமிழரசன் நேராக தங்கையின் படுக்கைக்கு சென்று அவரது தலையில் பெரிய கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.
மகள் அலறுவதை கண்டு தாயார் ராஜேஷ்வரி வேகமாக வந்துள்ளார். அப்போது, தாயாரை பிடித்து தள்ளிவிட்டு கத்தியை எடுத்து அவரது கழுத்தை அறுத்து தமிழரசன் கொலை செய்துள்ளார்.
இருவரையும் கொலை செய்துவிட்டு தனது தந்தைக்காக தமிழரசன் காத்திருந்துள்ளார். இரவு வேலைக்கு சென்றுவிட்டு காலை 6.30 மணியளவில் தந்தை வீட்டிற்கு வந்தபோது மறைந்திருந்து அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இச்சம்பவத்திற்கு பிறகு பொலிசாரால் கைது செய்யப்பட்ட தமிழரசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தலித் பெண்ணை காதலித்தற்காக பெற்றோர் மற்றும் சகோதரி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை கொலை செய்ததாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Average Rating