கிளிநொச்சி சகோதரிகளின் உயிரிழப்பு தற்கொலையா?
Read Time:1 Minute, 26 Second
கிளிநொச்சியில் நேற்று(7) குளத்தில் குளிக்கச் சென்ற இரு சகோதரிகள்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்குறித்த மரணம் தற்கொலையா? என பிரதேச வாசிகள் மத்தியில் சந்தேகம் நிலவுவாதாகஅங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளிநொச்சி ஆணைவிழுந்தான் பிரதேசத்தைச் சேர்ந்த ரகுநாதன் பிரியா (வயது-16)மற்றும் கஜேந்திரன் தர்சினி (வயது-17) இருவரும் குளத்தில் குளிக்கச் சென்றசமயம் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் குறித்த மரணம் தொடர்பில் ஊர் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட சடலங்கள் அக்கராயன்குளம் பிரதேச வைத்தியசாலையில்பரிசோதிக்கப்பட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating