குழந்தை உடம்பில் மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த மனித மிருகம்! கொடூர வீடியோ…!!
கம்போடியாவில் இளைஞன் ஒருவன் மிருகத்தனமாக 2 வயது ஆண் குழந்தைக்கு மின்சாரம் வைத்து துடிதுடிப்பதை ரசித்த சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த வீடியோவில், இளைஞன் ஒருவன் மின் கம்பியை குழந்தை உடலில் வைத்து கொடுமை செய்கிறான். வீடியோவை பதிவு செய்த இளைஞன் அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளான்.
இதைக்கண்டு பலர் அதிர்ச்சியடைந்து பொலிசில் புகார் அளித்துள்ளனர். மேலும், பாதிக்கப்ட்ட குழந்தையின் பெற்றோரும் புகார் அளித்துள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிசார், வீடியோவில் இருந்த வெளிநாட்டு நபர் உட்பட கம்போடியாவை சேர்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
இதில், முக்கிய குற்றவாளி வியட்நாமை சேர்ந்த 25 வயதான Nguyen Thanh Dung என தெரியவந்துள்ளது.
இதையடுத்து கம்போடியா பொலிசார் அளித்த தகவலின் படி, வியட்நாம் பொலிசார் நடத்திய சோதனையில் Ho Chi Minh வைத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான்.
Average Rating