நைஜீரியா இரட்டை வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 45-ஆக உயர்வு..!!
நைஜீரியாவின் மடகாலி நகரத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் தீவிரவாதிகள் நேற்று காலை அடுத்தடுத்து இரண்டு முறை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை எதிர்த்து நைஜீரியா ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
மடகாலி பகுதியை கடந்த ஆண்டு போகோ ஹாரம் தீவிரவாதிகளிடம் இருந்து நைஜீரிய அரசு படைகள் கைப்பற்றி இருந்தது. மேலும், போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருதால், அவர்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இரண்டு முறை நடந்த இந்த வெடிகுண்டு தாக்குதலில் முதல்கட்டமாக 10 பேர் பலியானதாக நைஜீரியா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வெடிகுண்டு தாக்குதல் குறித்து நைஜீரியா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45-ஆக உயர்ந்துள்ளது.
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் பதரே அகிண்டோயி கூறுகையில், “இரண்டு பெண் தற்கொலைப்படையினரால் மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்” என்றார்.
Average Rating