பல்கேரியா: சரக்கு ரெயில் டேங்கர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி..!!!
பல்கேரியா நாட்டின் தலைநகரான சோபியாவில் இருந்து சுமார் 240 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹிட்ரினோ என்ற கிராமத்தின் வழியாக எளிதில் தீபிடிக்கக்கூடிய ரசாயன டேங்கர்களுடன் ஒரு சரக்கு ரெயில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது.
திடீரென தண்டவாளத்தைவிட்டு விலகிய அந்த ரெயிலின் இரு டேங்கர்கள் கீழே சரிந்து விழுந்தது. விழுந்த வேகத்தில் இரு டேங்கர்கள் பயங்கரமாக வெடித்து, சிதறி, தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இந்த விபத்தில் ரெயில் பாதையோரமுள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. அவற்றில் வசித்த பலருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. தகவலறிந்து மீனவ கிராமமான அந்த கிராமத்தில் வசிக்கும் மீனவர்கள் விரைந்துவந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
பலரை உயிருடன் காப்பாற்றியதுடன், தீயில் கருகி இருந்த நான்கு பிரேதங்களையும் அவர்கள் மீட்டனர். இந்த விபத்து நடந்த இடத்துக்கு பல்கேரியா பிரதமர் பொய்க்கோ போரிசோவ் விரைந்து சென்றார்.
காயங்களுடன் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுவருபவர்களை காப்பாற்ற இரத்த தானம் அளிக்குமாறு அப்பகுதி மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.
Average Rating