தண்டவாளத்தில் தலை வைத்த என்ஜினீயரிங் மாணவர்..!!
கோவை ஆவாரம்பாளையம் சக்தி எஸ்டேட்டை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மகன் பசுபதி (வயது 21). இவர் கரட்டுமேட்டில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்தநிலையில் பசுபதி நடந்து முடிந்த தேர்வில் சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அவர் மிகுந்த மனவேதனையுடன் காணப்பட்டார்.
நேற்று இரவு வீட்டில் இருந்த பசுபதி வாழ்கையில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி வீட்டின் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ரெயில் இவர் மீது ஏறி இறங்கியது.
இதில் தலை துண்டாகி பசுபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து தற்கொலை செய்து கொண்ட பசுபதியின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Average Rating