மனைவியை வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவன்: திடுக்கிடும் காரணம்…!!

Read Time:2 Minute, 53 Second

625-500-560-350-160-300-053-800-748-160-70மும்பையில் தனது மனைவியை வெட்டி சூட்கேஸில் அடைத்து வீசிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பையில் காண்டிவலி ரயில் நிலைய பகுதியில் கடந்த நவம்பர் 14 ஆம் திகதி உடல் வெட்டி கூறுபோட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது.

இதையறிந்த மும்பை கிரைம்பிரான்ச் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி அது யாருடையது என அறிய சடலத்தின் கைரேகையை வைத்து ஆதார் கார்டு வழங்கும் மையத்தில் சோதனை செய்தனர். ஆனால் யார் என கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து, சமூக வலைதளங்கள், பத்திரிக்கைகளில் கொலைசெய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு யார் என்பதை அறிய முற்பட்டனர்.

இந்நிலையில், இந்த விளம்பரத்தை பார்த்த மும்பை போரிவாலி போய்சர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தகவல் அளித்துள்ளார்.

அதில், கொலை செய்யப்பட்டுள்ளது பிரியங்கா வர்மா(29) எனவும், பிரியங்கா வர்மா (29), அவரது கணவன் தினேஷ் வெர்மா (35) என்று கூறினார்.

இந்த தகவலைக் கொண்டு பொலிசார் விசாரனை மேற்கொண்டதில், பிரியங்கா வர்மா தனது கணவரை விட்டு வேறொருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் அவரது கணவன் தினேஷ் வர்மா தனது நண்பர் கௌதமுடன் சேர்ந்து, கொலை செய்து விட்டு தனது குழந்தையுடன் தினேஷ் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தினேஷ்,கெளதமை தேடிய பொலிசார் கெளதமை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கள்ளத்தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து, தினேஷின் மனைவி பிரியங்கா வர்மாவை கொள்ள கெளதம் மற்றும் புல்மாடியும் உதவியுள்ளனர். பிரியங்கா வர்மாவை கொலை செய்து சூட்கேசில் வைத்து மும்பை காண்டிவலி ரயில் நிலையத்தில் வீசினார் என கெளதம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து தப்பி ஓடிய தினேஷ் வர்மா மற்றும் புல்மாட்டியை பொலிசார் தேடிவருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களிடம் அதுமட்டும் முடியவே முடியாதாம்…!!
Next post பெற்ற குழந்தையை கால்வாயில் வீசிய கொடூரத் தாய்: இதுவும் ஒரு காரணமா?