பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் சித்ரவதை: ஆசிரியை மீது புகார்…!!
Read Time:59 Second
புதுவையில் தனியார் நடத்தும் பிரெஞ்சு பள்ளி உள்ளது. இந்த பள்ளி ஆசிரியை கிறிஸ்டினா. இவர், பள்ளியில் கல்வி கற்று தரும்போது, பாடம் சரியாக படிக்காத மாணவர்களை கடுமையாக கண்டித்து வந்ததாக விமர்சனம் இருந்து வந்தது.
இந்தநிலையில் அப்பள்ளி மாணவர்கள் ஷாஜ்வின், சார்லஸ் ஆகியோரை அந்த ஆசிரியை வகுப்பறையில் அடித்து சித்ரவதை செய்ததாக குழந்தைகள் நலக்குழு தலைவி வித்யா ராம்குமாருக்கு தெரியவந்தது.
இதுபற்றி ஒதியஞ்சாலை போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் ஆசிரியை கிறிஸ்டினா மீது சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Average Rating