மயக்க மருந்து கொடுத்து 30 மாணவிகளை சீரழித்த காமுகர்கள்! வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
தமிழகத்தில் டியூசனுக்கு படிக்க வரும் மாணவிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 3 பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் சிவக்குமார் (25), ஈஸ்வரன் (26) மற்றொரு சிவக்குமார் (27). இவர்கள் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளனர்.
சரியான வேலை கிடைக்காத நிலையில் நண்பர்களான 3 பேரும் சேர்ந்து பாலக்கோடு மற்றும் தர்மபுரி நெசவாளர் காலனி பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக டியூசன் சென்டர் நடத்தி வருகிறார்கள்.
இங்கு 10 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில் டியூசனுக்கு வரும் மாணவிகள் சிலரை மயக்க மருந்து கொடுத்து சிவக்குமார் உள்பட சிலர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தன.
டியூசன் சென்டர் தொடங்கிய சில மாதங்களிலேயே சிவக்குமார் தனது காமசேட்டைகளை தொடங்கி உள்ளார்.
அழகாக இருக்கும் மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியில் உறைந்து போகும் மாணவிகளை தன்னுடைய காம இச்சைக்கு சிவக்குமார் அடிக்கடி பயன்படுத்தி உள்ளார்.
இதேபோல் அவருடைய நண்பர்களான மற்ற இரண்டு போரும் மாணவிகளை தங்களுடைய காம இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர்.
இப்படியாக இதுவரை 30க்கும் மேற்பட்ட மாணவிகளை ஆசிரியர்கள் என்ற போர்வையில் அவர்கள் சீரழித்துள்ளனர்.
தற்போது ஒரு மாணவி மூலம் அனைத்து விடயங்களும் வெட்ட வெளிச்சமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து குற்றவாளிகளான சிவக்குமார், ஈஸ்வரன் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் தொடர்புடைய மற்றொரு நபரையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
டியூசன் சென்டர் என்ற போர்வையில் கடந்த 2 வருடங்களுக்கும் மேல் சத்தம் இல்லாமல் அரங்கேறிய இந்த கொடூர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Average Rating