திருமண ஆசைகாட்டி மாணவி கற்பழிப்பு: ஆட்டோ டிரைவர் கைது…!!

Read Time:2 Minute, 48 Second

201612161532092844_auto-driver-arrested-for-girl-molested-near_secvpfதிருவனந்தபுரம் காஞ்சிரங்குளம் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 22). ஆட்டோ டிரைவர். அதே பகுதியை சேர்ந்த ஒரு கூலி தொழிலாளி தம்பதியின் மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் தினமும் பள்ளிக் கூடத்திற்கு நடந்து செல்லும் போது ஆட்டோ டிரைவர் அனில்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

அந்த மாணவியை திருமணம் செய்து கொள்வதாக அனில்குமார் ஆசை வார்த்தைகளை கூறினார். அதை நம்பி அந்த மாணவி அவருடன் பல இடங்களுக்கு சென்றார். லாட்ஜுக்கும் அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார்.

பெற்றோர் வேலைக்கு சென்றபிறகு அந்த மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் நேரங்களில் அனில் குமார் அங்கு சென்று அந்த மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். நாளடைவில் இது அக்கம் பக்கத்தினர் மூலம் அந்த மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்தது.

உடனே அவர்கள் மகளை கண்டித்தனர். அப்போது அவர் அந்த ஆட்டோ டிரைவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்திருப்பதாக கூறினார். இதைதொடர்ந்து அனில் குமாரை மாணவியின் பெற்றோர் சந்தித்து அவரை திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டனர்.

முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்த அனில்குமார் அதன்பிறகு தலைமறைவாகி விட்டார். அவரை அந்த மாணவி செல்போனில் தொடர்புகொண்டபோதும் அவர் போனை எடுக்கவில்லை.

இந்த நிலையில் தற்செயலாக அனில்குமாரை நேரில் சந்தித்த அந்த மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மீண்டும் வற்புறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த அனில்குமார் அந்த மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுவிட்டார்.

இதைதொடர்ந்து காஞ்சிரங்கோடு போலீசில் மாணவி கற்பழிக்கப்பட்டது பற்றி புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் அனில்குமாரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜபாளையத்தில் 30 மில்லி கிராம் தங்கத்தில் செய்யப்பட்ட தீப விளக்கு…!!
Next post நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு…!!