விபரீதத்தில் முடிந்த Bungee jump சாகசம்: மரணத்தை வென்ற 6 வயது சிறுவன்…!!
பிரேசிலில் தமது குடும்பத்தினர் முன்னிலையில் Bungee jump சாகசத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் தலை தரையில் மோதி கொடூரமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலின் சாவோ பாவ்லோ மாநிலத்தில் குறித்த கொடூர சம்பவம் நசந்துள்ளது. இப்பகுதியில் செயல்பட்டு வரும் Bungee jump சாகசத்தில் அப்பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலாவுக்கு வந்த 36 வயது Fabio Ezequiel de Moraes கலந்து கொண்டுள்ளார்.
முதலில் தமது 6 வயது மகனுடன் குறித்த சாகசத்தில் ஈடுபடவே அவர் முடிவு செய்தாராம். ஆனால் திடீரென்று அந்த முடிவை மாற்றிக் கொண்டதுடன் தான் மட்டும் முதலில் ஒருமுறை சாகசத்தில் ஈடுபட முடிவு செய்தாராம்.
இதனையடுத்து குறித்த சாகச நிகழ்வை ஒருங்கிணைக்கும் நபர்கள் ஆயத்த நடவடிக்கைகளை இவருக்கு மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து 40 மீற்றர் Bungee jump சாகசத்தில் ஈடுபட இதற்கென பிரத்யேகமாக வடிமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது கொண்டு செல்லப்பட்டர்.
குறித்த சாகச நிகழ்வை ஃபாபியோவின் மனைவி, குழந்தை மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வியப்புடனும் மிகுந்த ஆர்வத்துடனும் காண தயாராகி நின்றுள்ளனர்.
இதனையடுத்து குறித்த பாலத்தில் அமைந்துள்ள மேடையில் இருந்து குதித்த ஃபாபியோவின் தலை எவரும் எதிர்பார்க்காத நிலையில் தரையில் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள் உடனடியாக ஃபாபியோவை மீட்டு அடுத்துள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். ஆனால் தலை நேரிடையாக தரையில் மோதியுள்ளதால் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்துள்ளார்.
தரைக்கும் சாகசத்தின்போது குதிக்கும் பாலத்திற்கும் இடையேயான நீளம் குறித்த தவறான கணக்கிடுதலே குறிப்பிட்ட விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் தகவல் அறிந்து வந்த பொலிசார் குறித்த சாகசத்திற்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து குற்றவியல் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த செப்டம்பர் மாதம் தென் கொரியாவில் 29 வயதான இளம்பெண் ஒருவர் இதுபோன்ற சாகசத்தில் ஈடுபட்டு பலத்த காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
Average Rating